Friday 2 February, 2007

அப்போதைய மனநிலையில்...

அவர்கள்
என் குரலைப் பறித்துக் கொள்ள வந்திருக்கிறார்கள்.

இப்போது,
எனக்குப் பெயரில்லை,
முகமில்லை.
ஆனால் ஓர் உறுதியுண்டு;
எப்போதும்,
என் குரலை நான் இழக்கமாட்டேன்,
பாடாமல் ஓய்ந்துப் போகமாட்டேன்!

எத்தனை தாக்குதல்கள் வந்தாலும் சரி,
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்,
என் கனவுகளையெல்லாம்
நிஜங்கள் கொன்று போட்டாலும் பரவாயில்லை.
நான் பாடிக் கொண்டேயிருப்பேன்...

இழுத்துப் பீய்க்கப்படும பாட்டாம்பூச்சிகளைப் பற்றி.

-
சல்மான் ருஷ்டி.
  • சாத்தானின் கவிதைகள் எழுதியதற்காக 1989 பிப்ரவரி 14 அன்று, சல்மான் ருஷ்டிக்கு இரான் அதிபர் அபயதுல்லா கோமேனி மரண தண்டனை விதி்த்தார். இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்த சல்மான் ருஷ்டி 1989 மார்ச் 6 அன்று, அப்போதைய மனநிலையில் எழுதிய கவிதை.