Friday 13 April, 2007

ஈனப்பொறப்புக்கு...

பெயர்
பெத்தவங்களுக்கு
பாப்பா
பள்ளிகூடத்தில்
கட்டச்சி
அண்ணனுக்கு
மண்ணுதின்னி
மாமன் மவனுக்கு
கருப்பி
புருஷனுக்கு
பன்னாடை
மாமியார்காரிக்கு
மலடி
வாழுறப்பதான் பேரில்லன்னா
செத்ததுக்கப்புறம்
பொணம்கிறாங்க!

ஈனப்பொறப்புக்கு
இளவரசின்னு பேரவச்சு
எந்தவாயும் கூப்புடலையே...
பாவிமகளேன்னு
மாரடிக்கிறா
பேரு மறந்துபோன பெரிய கிழவி.

- கவிதாகுமரன்.

(நன்றி : பெண்ணே நீ,ஏப்ரல் 2007)