கலீல்ஜிப்ரான் என்றால் நமக்கெல்லாம் அவர் படைத்த “முறிந்த சிறகுகளும’’, “சல்மா’’வும்தான் நினைவுக்கு வரும்.
அவர் தன்னுடைய லெபனான் நாட்டைப் பற்றியும் மிகுந்த அக்கறையுடன் நிறைய எழுதியுள்ளார்.
அதில் ஒன்றுதான் இந்த வசன கவிதை.
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் தன் அரபு இன மக்களுக்காக இதை எழுதியுள்ளார்.
"மத்திய கிழக்கில் இன்று
இருவகை மனிதர்கள்
இருக்கின்றனர்.
ஒருவர் இறந்த காலத்துக்காரர்.
மற்றொருவர் வருங்காலத்துக்காரர்.
அவர்களுள் நீ யார்?
என் அருகில் வா
நான் உன்னைப் பார்க்கவேண்டும்.
உன் தோற்றத்தில், நடத்தையில்
நீ
வெளிச்சத்திற்குள் வருபவனா?
இல்லை இருளுக்குள் செல்பவனா? என்பதை
நான் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
வா! நீ யார், எத்தகையவன்?
என்பதை என்னிடம் சொல்.
உன் நாடு உனக்கு என்ன செய்யும்
என்று கேட்கும் அரசியல்வாதியா நீ?
இல்லை, உன் நாட்டுக்கு நீ என்ன
செய்யமுடியும் என்று கேட்கும்
பற்றார்வம் கொண்டவனா?
நீ முதலாமவன் என்றால்
நீ ஓர் ஒட்டுண்ணி.
இரண்டாமவன் என்றால்
நீ பாலைவனத்தில்
ஒரு நீருற்று."
இதுதான் அக்கவிதை.
இதில் நீங்கள் எந்த வகை?
Saturday 6 January, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பின்னூட்டமிட்ட நண்பருக்கு "இலக்கியம்" தன் நன்றியை உரித்தாக்குகிறது.
கவிதைகள் அருமை.வாழ்த்துக்கள்
Post a Comment